குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை -டிடிவி தினகரன்
குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என பதில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் குக்கர் சின்னம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை. திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படததால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். குக்கர் சின்னம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story