கல்வி உதவி தொகையில் ஊழல் நடைபெற்று உள்ளது; மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு


கல்வி உதவி தொகையில் ஊழல் நடைபெற்று உள்ளது; மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Feb 2019 2:56 PM GMT (Updated: 7 Feb 2019 2:56 PM GMT)

கல்வி உதவி தொகையில் ஊழல் நடைபெற்று உள்ளது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கூறும்பொழுது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிக முக்கியமான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுகிறது.

உதவித்தொகையில் ஊழல் நடைபெற்றுள்ளது.  இது குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Next Story