சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு


சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு
x
தினத்தந்தி 11 Feb 2019 2:27 PM GMT (Updated: 11 Feb 2019 2:27 PM GMT)

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது என்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story