புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் - நிதின் கட்கரி


புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் - நிதின் கட்கரி
x
தினத்தந்தி 15 Feb 2019 10:49 AM GMT (Updated: 15 Feb 2019 10:49 AM GMT)

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, 

பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும். புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் என்றார்.

Next Story