தஞ்சையில் கார் மோதி விபத்து; 2 பேர் பலி


தஞ்சையில் கார் மோதி விபத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 Feb 2019 7:32 AM GMT (Updated: 17 Feb 2019 7:32 AM GMT)

தஞ்சையில் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

தஞ்சை,

தஞ்சை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது அந்த வழியே சென்ற கார் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் கவுரி, கருப்பையா ஆகிய 2  பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Next Story