முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்


முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 21 Feb 2019 3:49 AM GMT (Updated: 21 Feb 2019 3:49 AM GMT)

முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன், கட்சியை கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “ முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது.  தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் எனும் குடும்பம் பரவியுள்ளது.  

மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன். நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன, குறுகிய நாட்களே உள்ளன” என்றார். 

கட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி இன்று பிற்பகல் நாகை மாவட்டம் செல்லும் கமல்ஹாசன், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

Next Story