“குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது” 2ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது என்று 2ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சென்னை,
திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட திருவாரூரை தேர்ந்தெடுக்க காரணம், தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் தான்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.
மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது. நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story