தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை


தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 22 Feb 2019 2:51 AM GMT (Updated: 22 Feb 2019 2:51 AM GMT)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும்  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

 தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை நேற்று  இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இன்று மேலும் 5 பேரை கைது செய்துள்ளது. 

Next Story