மதுரையில் பாஜக மேலிடப் பொறுப்பாளரை சந்தித்ததாக தகவல் ஜி.கே.வாசன் மறுப்பு
மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவுடன் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார் என வந்த தகவலை ஜி.கே வாசன் மறுத்து உள்ளார்.
மதுரை
பெங்களூருவிலிருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் காலை 10:15 மணிக்கு வந்தார். பின் அவர் மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி வளாகத்தில் காலை 10:25 முதல் 11:30 மணி வரை நடக்கும் பா.ஜ., லோக்சபா தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்தார். சந்திப்பின் போது முரளிதரராவ், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார் என தகவல் வெளியாகியது. ஆனால் இதனை ஜி.கே வாசன் மறுத்து உள்ளார்.
இது குறித்து ஜி.கே வாசன் கூறியதாவது:-
நான் திருமணத்திற்காக வந்தேன். நான் யாரையும் சந்திக்கவில்லை. தவறான தகவல். நான் யாரையும் சந்தித்தால் தைரியமாக சந்திப்பேன் என கூறினார்.
Related Tags :
Next Story