தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்


தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 2 March 2019 11:32 AM GMT (Updated: 2 March 2019 11:32 AM GMT)

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சாதகமாக சென்று கொண்டிருக்கிறது, விரைவில் உறுதி செய்யப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துல்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சாதகமாக சென்று கொண்டிருக்கிறது, விரைவில் உறுதி செய்யப்படும்.

நாளை மறுநாள் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெல்வதும் முக்கியம், நாடு முழுவதும் தாமரையை மலரவைப்பதும் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story