மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின் தான் - கனிமொழி எம்.பி. பேச்சு


மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின் தான் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 March 2019 2:34 PM GMT (Updated: 6 March 2019 2:34 PM GMT)

மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின்தான் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. இதற்காக விருதுநகர் பட்டம்புதூரில் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற திமுக கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி பேசியதாவது:

எதிரணியினரின் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை விமர்சித்துவிட்டு தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளனர். மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுப்பவர் ஸ்டாலின் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story