பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி


பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 March 2019 2:43 AM GMT (Updated: 13 March 2019 2:43 AM GMT)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி, 

கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். 

காரில் சென்றவர்கள் கோவை மசக்காளிபாளையத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

Next Story