மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதுரை,
2007-ல் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. கருத்துகணிப்பு வெளியிட்டதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட போது வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
Related Tags :
Next Story