மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை


மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 March 2019 6:35 AM GMT (Updated: 21 March 2019 6:35 AM GMT)

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

மதுரை,

2007-ல் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. கருத்துகணிப்பு வெளியிட்டதால், இந்த தாக்குதல்  நடத்தப்பட்டது. தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட போது வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான  வழக்கில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

Next Story