இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்


இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 24 March 2019 11:45 PM GMT (Updated: 24 March 2019 8:05 PM GMT)

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சென்னை, 

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

வடசென்னை

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜூக்கு ஆதரவாக 25-3-2019 (இன்று) மாலை 3.45 மணியளவில் ராயபுரம் காவல் நிலையம் அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 4.15 மணிக்கு காசிமேடு, 4.45 மணிக்கு எஸ்.என்.செட்டி தெரு, அப்பாசாமி கோவில் தெரு இடதுபக்கம், 5.30 மணிக்கு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், 6 மணிக்கு எண்ணூர் சாலை - மணலி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

மாலை 6.30 மணிக்கு முல்லைநகர் பஸ் நிலையம் அருகே பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இரவு 6.50 மணிக்கு சத்தியமூர்த்தி நகர் அசோக்பில்லர், 7.15 மணிக்கு மூர்த்திங்கர் தெரு, 7.45 மணிக்கு சர்மாநகர், 8.15 மணிக்கு மூலக்கடை மாதவரம் நெடுஞ்சாலை, 8.45 மணிக்கு பல்லவன் சாலை டான்பாஸ்கோ பள்ளி காமராஜர் சிலை, 9.15 மணிக்கு ஓட்டேரி பாலம் - திரு.வி.க. நகர், 9.30 மணிக்கு ரமணா தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தொடர்ந்து, வீனஸ் மார்க்கெட், காந்தி சாலை, செம்பியம் காவல் நிலையம் வழியாக பெரம்பூர் பாலம் அருகே தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்கிறார்.

தென்சென்னை

26-3-2019 அன்று (நாளை) தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம் பால் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

காலை 8 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் - பாரதியார் வீடு பின்புறம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, 8.30 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட், 9.15 மணிக்கு சூளை, 9.45 மணிக்கு டி.பி.சத்திரம், 10.15 மணிக்கு சி.எம்.டி.ஏ. காலனி, 10.30 மணிக்கு கோயம்பேடு ரவுண்டானா ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 4 மணிக்கு கோட்டூர்புரம் சாலை - பொன்னியம்மன் கோவில் மார்க்கெட், 4.30 மணிக்கு ரேஸ் கோர்ஸ் சாலை, 5 மணிக்கு மத்திய கைலாஷ் - குருநானக் கல்லூரி வழியாக காந்தி சாலை, 5.45 மணிக்கு அம்பிகா தெரு - திருவான்மியூர் மேற்கு அவென்யூ, அண்ணா தெரு, லட்சுமிபுரம் காந்தி சாலை, சாஸ்திரிநகர் முதல் அவென்யூ, ஆர்.கே.மடம், தெற்கு மாடவீதி வழியாக மாங்கொல்லை, 6.15 மணிக்கு வடக்குமாட வீதி, லஸ் கார்னர், திருவள்ளுவர் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, அரங்கநாதர் சப்வே, 6.45 மணிக்கு கரும்பாடி அம்மன் கோவில், இரவு 7.15 மணிக்கு விருகம்பாக்கம் ஏரிக்கரை, 8 மணிக்கு தசரதபுரம் சாலை சந்திப்பு, 8.30 மணிக்கு தி.நகர், 9.15 மணிக்கு கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

காஞ்சீபுரம் - ஸ்ரீபெரும்புதூர்

27-3-2019 (புதன்கிழமை) தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அ.வைத்திலிங்கம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

காலை 8.30 மணிக்கு சோழிங்கநல்லூர், 9.30 மணிக்கு திருப்போரூர் கடைவீதி, 10.30 மணிக்கு மாமல்லபுரம், பகல் 11.15 மணிக்கு திருக்கழுக்குன்றம், 12 மணிக்கு தாம்பரம், 12.30 மணிக்கு பல்லாவரம், 1 மணிக்கு கிண்டி, மாலை 3 மணிக்கு போரூர் ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

மாலை 4 மணிக்கு பூந்தமல்லி பஜார், 4.45 மணிக்கு திருமழிசை, 5.30 மணிக்கு வெள்ளவேடு, 6.30 மணிக்கு காக்களூர், இரவு 7 மணிக்கு ஆவடி பஜார், 7.45 மணிக்கு அம்பத்தூர் ராக்கி தியேட்டர், 9 மணிக்கு செங்குன்றம் பஜார் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story