“குஷ்புவுக்கு வயதாகி விட்டது, அவர் பிரசாரத்துக்கு ஓட்டு கிடைக்காது” அமைச்சர் செல்லூர் ராஜூ


“குஷ்புவுக்கு வயதாகி விட்டது, அவர் பிரசாரத்துக்கு ஓட்டு கிடைக்காது” அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 8 April 2019 8:00 PM GMT (Updated: 8 April 2019 8:00 PM GMT)

“குஷ்புவுக்கு வயதாகி விட்டது, அவர் பிரசாரத்துக்கு ஓட்டு கிடைக்காது” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை, 

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறி வருகிறார். காகிதப்பூ மணக்கலாம். கருவாடு மீன் ஆகலாம். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரை வைகை ஆற்று கரையோரம் நின்று கொண்டு ஏராளமானோர் வேடிக்கை பார்த்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்களே என்று நாமும் சென்று பார்த்தால், எருமை மாட்டை குளிப்பாட்டுவதை அனைவரும் நின்று பார்த்து கொண்டு இருந்தார்கள்.

அதேபோல் நடிகர்-நடிகைகள் பிரசாரம் செய்தால் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். வடிவேலுவுக்கு கூடாத கூட்டமா? கூட்டம் எல்லாம் ஓட்டு ஆக மாறாது. குஷ்புவுக்கு ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள். ஆனால் அதே குஷ்பு தி.மு.க.வுக்கு வந்து ஓட்டு கேட்ட போது யாரும் ஓட்டு போடவில்லை. இன்றைக்கு குஷ்புவுக்கு வயதாகிவிட்டது. எனவே அவரது பிரசாரத்தை பார்த்துவிட்டு, மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story