பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின்


பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்: மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 April 2019 5:17 AM GMT (Updated: 17 April 2019 5:17 AM GMT)

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது. 

ஊரை ஏமாற்றுவதற்காக பழத்துக்காக பணம் தந்ததாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.  பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

Next Story