இலங்கை குண்டுவெடிப்பு; தமிழக கடற்பரப்பில் ரோந்து பணியில் இந்திய விமானப்படை, கடற்படை


இலங்கை குண்டுவெடிப்பு; தமிழக கடற்பரப்பில் ரோந்து பணியில் இந்திய விமானப்படை, கடற்படை
x
தினத்தந்தி 25 April 2019 3:07 PM GMT (Updated: 25 April 2019 3:07 PM GMT)

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தமிழக கடற்பரப்பில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். #SriLankablast

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை அடுத்தடுத்து மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக கடற்பரப்பில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 4 நாட்களாக கடலோர காவல்படையின் 12 கப்பல்களும், கடற்படையின் 4 கப்பல்களும், இந்திய விமானப்படையின் 2 விமானங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.  அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story