பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றது
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ போலீஸ் அதிகாரப்பூர்வமாக விசாரணைக்கு ஏற்றது.
சென்னை,
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.
இந்த நிலையில், தமிழக அரசும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடனடியாக விசாரணையை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். 8 பேருக்கு எதிராக சிபிஐ போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் போலீஸ் விசாரணையில்பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது, சிபிஐ அதிரடியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிகிறது.
Related Tags :
Next Story