குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்


குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 April 2019 3:52 AM GMT (Updated: 29 April 2019 3:52 AM GMT)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் ராசி புரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட ஈரோடு சூரம்பட்டி அருள்சாமி (47) மற்றும் ஈரோடு மாமரத்துபாளையம் ஹசீனா (26) , ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரத்தை சேர்ந்த செல்வி (29), ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியை சேர்ந்த லீலா (36) உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். 

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  அமுதவள்ளி கணவர் ரவிச்சந்திரன் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


Next Story