நெல்லை அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி


நெல்லை அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
x
தினத்தந்தி 30 April 2019 2:50 AM GMT (Updated: 30 April 2019 2:50 AM GMT)

ஆலங்குளம் அருகே கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதியதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து  என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

 இந்த விபத்தில், காரில் இருந்த 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் லாரியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story