விமான நிலையத்தில், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்


விமான நிலையத்தில், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 May 2019 5:21 AM GMT (Updated: 1 May 2019 5:21 AM GMT)

திருச்சி விமான நிலையத்தில், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, இளையான்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரை சேர்ந்த முகமது ரியாஸ், புதுக்கோட்டையை சேர்ந்த சாபுபரலி ஆகியோர் கடத்தி வந்த சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 957 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story