ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்த சிறுமி மூச்சுத்திணறி மரணம்


ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்த சிறுமி மூச்சுத்திணறி மரணம்
x
தினத்தந்தி 4 May 2019 9:40 AM GMT (Updated: 4 May 2019 9:40 AM GMT)

சென்னையில், ஒளிந்து விளையாடுவதற்காக மரப்பெட்டிக்குள் நுழைந்தபோது மூடிக் கொண்டதில், சிறுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை,

திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திருப்பதி சாமி என்பவரும் அவரது மனைவியும் நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டனர். அவர்களது இரு பெண் குழந்தைகளான தனஸ்ரீ, சாருலதா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

வேலை முடிந்து வீடு திரும்பியபோது இரு மகள்களும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருப்பதிசாமி அவர்களை தேடியுள்ளார். வீட்டின் மாடியில் இருந்த மரப்பெட்டியில் இருந்து சத்தம் வரவே திறந்து பார்த்தபோது, இரு குழந்தைகளும் வாந்தி எடுத்தபடி மயங்கிக் கிடந்துள்ளனர்.

இதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாருலதாவுக்கு தனியார்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டின் போது, இரு குழந்தைகளும் மரப்பெட்டிக்குள் அமர்ந்துள்ளனர்.

பெட்டியை மூடுகையில், தாளிட்டுக் கொண்டது. இதன் காரணமாக இரு குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் பெற்றோர், கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சோகச் சம்பவம் எடுத்துரைத்துள்ளது.

Next Story