தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை மையம்


தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 13 May 2019 8:22 AM GMT (Updated: 13 May 2019 9:50 AM GMT)

தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது:-

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும். அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்

கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மழை பெய்யாத இடங்களில்  வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 சென்டிமீட்டரும், பெருஞ்சாணி, நாமக்கல்லில் 3 சென்டிமீட்டரும், கயத்தாறில் 2 சென்டிமீட்டரும், மானாமதுரை, உதகையில் 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது என கூறி உள்ளது.

Next Story