ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு- ஜெயக்குமார்


ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு- ஜெயக்குமார்
x
தினத்தந்தி 14 May 2019 12:25 PM GMT (Updated: 14 May 2019 12:25 PM GMT)

ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசவேண்டும் . கமல்ஹாசன், ராஜேந்திரபாலாஜி என யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசவேண்டும்

ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு. திமுகவை பொறுத்தவரை அரசியல் கொள்கை கிடையாது; பதவி, பணம் தான் முக்கியம். சந்திப்பு என்பது ஒரு மணி நேரமா நடக்கும்? 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததுபோல, டிடிவி தினகரன் ஜெயலலிதாவை விமர்சிக்க துணிந்து விட்டதாகவும் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

Next Story