வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்


வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை  மையம்
x
தினத்தந்தி 15 May 2019 8:39 AM GMT (Updated: 15 May 2019 8:39 AM GMT)

வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, வெப்ப அலை வீச வாய்ப்பு இல்லை என்றும், அதாவது, அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Next Story