நாகை வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


நாகை வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 26 May 2019 3:23 AM GMT (Updated: 26 May 2019 3:23 AM GMT)

நாகை வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாகை,

நாகையில் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 5 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லாமல் தவிர்த்துள்ளனர்.

கடலுக்கு மீனவர்கள் செல்லாததால் 750க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Next Story