இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு


இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு
x
தினத்தந்தி 26 May 2019 1:31 PM GMT (Updated: 26 May 2019 1:31 PM GMT)

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.

சென்னை,

கடந்த ஏப்.,18-ம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் தமிழகசட்டப்பேரவைக்கான 18 தொகுதிகளுக்கும்,மே 19-ம் தேதி மேலும் 4 தொகுதிகளுக்கும் இடை தேர்தல் நடைபெற்றது. 

இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றது. 

இந்தநிலையில்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் 28-ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் 13 திமுக எம்எல்ஏக்களும் பதவியேற்க உள்ளனர்.

Next Story