தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 27 May 2019 8:25 AM GMT (Updated: 27 May 2019 8:25 AM GMT)

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

தமிழகத்தின் உள் மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பாசரில் 5 சென்டிமீட்டரும், நடுவட்டம் மற்றும் கிளன் மார்கனில் 3 சென்டிமீட்டரும், கொல்லிமலை, கொடநாடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 2 சென்டிமீட்டரும், பெருந்துறையில் 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

Next Story