பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு, வாகன ஓட்டிகள் கலக்கம்


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு, வாகன ஓட்டிகள் கலக்கம்
x
தினத்தந்தி 28 May 2019 1:09 AM GMT (Updated: 28 May 2019 1:09 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கலத்தில் உள்ளனர். 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.59 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.50 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story