தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்


தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 29 May 2019 6:11 AM GMT (Updated: 29 May 2019 6:11 AM GMT)

தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை, பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது. தமிழகத்திற்கு சாதகமான திட்டங்கள் இல்லையெனில் மறுபரிசீலனை செய்யப்படும். 

ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு என்றுமே நன்றியுடையவளாக இருப்பேன்” என்றார். 

Next Story