கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சூளகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகின.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினை அடுத்து, பேருந்துகளை பின்தொடர்ந்து வந்த லாரியும் கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story