தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலத்தை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
சென்னை,
கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்றுடன் வெயில் வறுத்து எடுக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. அதன் விவரங்கள் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 105.62 டிகிரி (40.9 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)
கோவை விமான நிலையம் - 90.32 டிகிரி (32.4 செல்சியஸ்)
கடலூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)
தர்மபுரி - 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 84.74 டிகிரி (29.3 செல்சியஸ்)
கரூர் - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)
கொடைக்கானல் - 64.4 டிகிரி (18 செல்சியஸ்)
மதுரை தெற்கு - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)
நாகப்பட்டினம் - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
நாமக்கல் - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 91.4 டிகிரி (33 செல்சியஸ்)
பரங்கிப்பேட்டை - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
சேலம் - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)
திருச்சி - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)
திருத்தணி - 107.06 டிகிரி (41.7 செல்சியஸ்)
தூத்துக்குடி - 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)
வேலூர் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)
Related Tags :
Next Story