அதிமுக ஆலோசனை கூட்டம்: சிரித்தபடி உள்ளே சென்றோம், சிரித்தபடி வெளியே வந்தோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


அதிமுக ஆலோசனை கூட்டம்: சிரித்தபடி உள்ளே சென்றோம், சிரித்தபடி வெளியே வந்தோம் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 12 Jun 2019 7:32 AM GMT (Updated: 12 Jun 2019 7:32 AM GMT)

எப்படி சிரித்தபடி உள்ளே சென்று கூட்டத்தில் பங்கேற்றோமோ, அப்படியே சிரித்தபடி வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக  நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது. தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட  செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. உள்ளாட்சித்தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை. அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் துணை  முதலமைச்சர் முடிவெடுப்பார்கள்.

தேர்தல் முடிவு மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசினோம்.  எப்படி சிரித்தபடி உள்ளே சென்று கூட்டத்தில் பங்கேற்றோமோ, அப்படியே சிரித்தபடி வெளியே வந்தோம். ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story