உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை -ஜெயக்குமார்
உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லாத சர்ச்சை. அதிமுகவில் பிரச்சினை வருமா என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான ஒன்று தான், இது மரியாதை நிமித்தமானது. அதிமுக தலைமை குறித்த விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அவர்கள் தலைமை கழகத்திற்கு முறையாக தகவல் தந்து உள்ளனர் என கூறினார்.
Related Tags :
Next Story