செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் -மயில்சாமி அண்ணாதுரை


செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் -மயில்சாமி அண்ணாதுரை
x
தினத்தந்தி 13 Jun 2019 7:55 AM GMT (Updated: 13 Jun 2019 10:05 AM GMT)

செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறி உள்ளார்.

சென்னை

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலவிற்கு பல நாடுகள் செயற்கைக்கோளை அனுப்பி இருந்தாலும், சந்திராயன் மட்டுமே துல்லியமாக எங்கெங்கு நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது.  சந்திராயன்-2 நிலவில் தரைஇறங்கி நீர் இருப்பை உறுதி செய்யும். செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, பின்னர் விண்கலத்தை ஓடுதளத்தில் இறக்க முயற்சி நடக்கிறது. விண்வெளிவீரர்கள் விண்கலம் மூலம் இதுவரை கடலில் இறக்கப்பட்டு வந்த நிலையில் ஓடுதளத்தில் இறக்க முயற்சி நடைபெறுகிறது என கூறினார்.

Next Story