மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்
மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை,
தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.
மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தண்ணீர் பிரச்சினைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும்.
வாக்கு வங்கிகள் எதுவும் குறையவில்லை, 40 தொகுதியில் போட்டியிடுவதையும், 4 தொகுதிகளில் போட்டியிட்டதையும் ஒப்பிடக்கூடாது என்றார்.
தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.
மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தண்ணீர் பிரச்சினைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும்.
வாக்கு வங்கிகள் எதுவும் குறையவில்லை, 40 தொகுதியில் போட்டியிடுவதையும், 4 தொகுதிகளில் போட்டியிட்டதையும் ஒப்பிடக்கூடாது என்றார்.
Related Tags :
Next Story