அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்


அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்
x
தினத்தந்தி 14 Jun 2019 9:58 AM GMT (Updated: 14 Jun 2019 9:58 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சென்னை

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Next Story