சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை


சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 Jun 2019 12:51 AM GMT (Updated: 15 Jun 2019 1:30 AM GMT)

சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரவுடி வல்லரசு என்பவர் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  ரவுடி வல்லரசுவை கைது செய்ய போலீசார் முயன்ற போது, போலீசாரை வல்லரசு அரிவாளால் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்டார். வல்லரசு மீது ஏராளமான கொலை , கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.  வல்லரசு தாக்கியதில், இரண்டு போலீசார் காயம் அடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த இரு உதவி ஆய்வாளர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story