தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 21 Jun 2019 5:28 AM GMT (Updated: 21 Jun 2019 5:28 AM GMT)

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

சென்னை,

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜாதி மதம் மொழி இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது தான் யோகா. யோகா என்பது அனைவருக்கும் சமம். அனைத்து பள்ளிகளிலும் யோகா கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. அதற்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாடத்திட்டங்களில் உள்ள தவறான எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான், இதில் எவ்வித மாற்றமும் இல்லை என இரண்டாவது முறையாக திட்டவட்டமாக கூறினார். 

Next Story