"கடந்த ஆண்டை விட மீன்வரத்து குறைவு" - முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் கோரிக்கை


கடந்த ஆண்டை விட மீன்வரத்து குறைவு - முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 9:59 AM GMT (Updated: 21 Jun 2019 9:59 AM GMT)

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையடுத்து கடந்த திங்கள் கிழமை கடலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினர்.

சென்னை,

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையடுத்து கடந்த திங்கள் கிழமை கடலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்கள் கொண்டு வந்த சுறா , பாறை, மத்தி உள்ளிட்ட மீன்களை வியாபாரிகளும், மீனவர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். 

பொதுவாக 5 நாட்களில் 5 ஆயிரம் கிலோ மீன்கள் வரை கிடைக்கும் எனவும், ஆனால் தற்போது 3 ஆயிரம் கிலோ மீன்களே கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முகத்துவார பகுதிகளை தூர்வாரினால் மீன்வளம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் கூறினர்.

Next Story