தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம்  -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2019 1:58 PM GMT (Updated: 21 Jun 2019 1:58 PM GMT)

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்றும் அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

35-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

தமிழகத்தின் கோரிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கனிவுடன் கேட்டார். இணக்க முறையில் வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்ததால் தமிழகத்திற்கு ரூ. 5000 கோடி வரை வர  வேண்டும், அதனை வழங்க அழுத்தம் தரப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும், திமுக எதிரி கட்சியாக உள்ளது. திமுகவின் போராட்டம் வெற்று போராட்டம் ஆகிவிடும்.

குடிநீர் பிரச்சினையில் அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கேரள அரசு முன் வந்தது  நல்லது. தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம், அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story