அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை


அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை
x
தினத்தந்தி 22 Jun 2019 9:31 AM GMT (Updated: 22 Jun 2019 11:02 AM GMT)

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஊட்டி தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டத்தில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது என கூறி உள்ளது.

Next Story