ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் : 3 லட்சம் பேர் பங்கேற்பு


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் : 3 லட்சம் பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Jun 2019 2:41 PM GMT (Updated: 23 Jun 2019 2:41 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

சென்னை,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என சுமார் 3 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். 

வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால், விவசாயம் பாதிக்கும் என்று கூறினார். இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகம் பாலைவனமாகும் என்றும் தமிழர்கள் அகதிகள் ஆவார்கள் என்று தெரிவித்தார். 

Next Story