மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; பதவியை காப்பாற்ற யாகம் நடத்துகிறார்கள்- மு.க.ஸ்டாலின்
மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை, பதவியை காப்பாற்ற யாகம் நடத்துகிறார்கள் என ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
காலி குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பங்கேற்று உள்ளனர். சேப்பாக்கம் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏ அன்பழகன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
குடம் இங்கே! குடிநீர் எங்கே?.... தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு தீர்க்க வேண்டும். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்துவதை குறை கூறவில்லை. அவர்கள் அதற்காக யாகம் நடத்தினால் பரவாயில்லை, அவர்கள் தங்களது பதவியை காப்பாற்றவே யாகம் நடத்துகிறார்கள். தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. சபாநாயகரை நீக்குவதை விட முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அகற்ற வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை பற்றி விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. திமுக சார்பில் எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story