சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் - சபாநாயகர் தனபால்


சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் - சபாநாயகர் தனபால்
x
தினத்தந்தி 24 Jun 2019 8:10 AM GMT (Updated: 24 Jun 2019 8:10 AM GMT)

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் கூறினார்.

சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்கியது . கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர்  பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை  நடைபெறும். 

தமிழக சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும். அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் இடம் பெறும்.  மறைந்த உறுப்பினர்களுக்கு 28-ந்தேதி இரங்கல்  தீர்மானம் நிறைவேற்றப்படும்.  29, 30-ந்தேதி அரசு விடுமுறை.

* ஜூலை 1-ந்தேதி வனம், சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 3ம் தேதி கூட்டுறவு, உணவுத்துறை  மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும். 

* ஜூலை 4ந் தேதி  எரிசக்தி துறை,  ஆயத்தீர்வு துறை  மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும் என கூறினார்.

Next Story