ஆட்சி மாற்றம் ஏற்படும் என மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான். மழைநீர் சேமிப்பு முறையை அனைவரும் செயல்படுத்த வேண்டும்.
யாகம் செய்தால் மட்டுமே தமிழகத்தில் மழை பெய்யும் என்று நான் சொல்லவில்லை. அனைத்து மதத்தினரின் பிரார்த்தனையால் தான் மழை பெய்து வருகிறது. கருத்து சுதந்திரம் பற்றிப்பேச காங்கிரசுக்கு தகுதியில்லை. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட நாள் இன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story