ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி


ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2019 7:15 AM GMT (Updated: 28 Jun 2019 7:15 AM GMT)

ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும், அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில், இன்று அமமுகவின் முன்னணி நிர்வாகியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.  

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- “ அதிமுகவை பாஜக இயக்குவதால், தன்மானத்தை இழந்து விட்டு அங்கு சேர விரும்பவில்லை.
ஒற்றை தலைமை இருப்பதால்தான் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

உழைப்பை பார்த்து தலைமையே பதவி கொடுக்குமென்ற நம்பிக்கை உள்ளது.  துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர், திமுக தலைவர் ஸ்டாலின். ஆளுமை மிக்க தலைவரான ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால், திமுகவில் இணைந்தேன். 

ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும். அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story