ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை, ’புறநானூறு புதிய வரிசை வகை’ நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை - ரஜினிகாந்த் பேச்சு


ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை, ’புறநானூறு புதிய வரிசை வகை’  நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை  -  ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 29 Jun 2019 4:16 PM GMT (Updated: 29 Jun 2019 4:16 PM GMT)

ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை, ’புறநானூறு புதிய வரிசை வகை’ நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை என்று சாலமன் பாப்பையா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை,

சென்னையில்  சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை  என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:- 

ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை. புறநானூறு புதிய வரிசை வகை நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை. 

சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை  நூல் எப்படியோ மக்களுக்கு சென்று சேர்ந்தால் நல்லது.   

சாலமன் பாப்பையா நூற்றாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.  சாலமன் பாப்பையா எழுதியுள்ள ’புறநானூறு புதிய வரிசை வகை’ நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story