நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காது - ப.சிதம்பரம்


நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காது - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 30 Jun 2019 2:36 PM GMT (Updated: 30 Jun 2019 2:36 PM GMT)

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.  நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காது.

தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் ராகுல் பதவி விலகுவதாக அறிவித்தார்.

தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை. மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story