ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசித்தார்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசித்தார்
x
தினத்தந்தி 12 July 2019 12:29 PM GMT (Updated: 12 July 2019 12:29 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் தரிசனம் செய்தார்.

காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தைக்காண தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சீபுரம் வந்தடைந்தார். பச்சையப்பாஸ் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் வரதராஜ பெருமாள் கோவில் வந்த குடியரசு தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர். 

தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்த குடியரசு தலைவர், கோவிலின் வரலாற்றையும் அத்திவரதரின் வரலாற்றையும் கேட்டறிந்தார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அத்திவரதரின் பழைய மற்றும் புதிய புகைப்படங்கள் பரிசளிக்கப்பட்டன.

குடியரசு தலைவருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி நகரில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 

Next Story